மகாத்மா காந்தியின் “சுயசார்பு” என்ற கனவை மெய்ப்பிக்கும் வகையில் மத்திய அரசின் திட்ட நடவடிக்கைகள் | Central Government’s program activities to fulfill Mahatma Gandhi’s dream of self-reliance

மகாத்மா காந்தியின் "சுயசார்பு" என்ற கனவை மெய்ப்பிக்கும் வகையில் மத்திய அரசின் திட்ட நடவடிக்கைகள் | Central Government's program activities to fulfill Mahatma Gandhi's dream of self-reliance

முன்னுரை

ஜனநாயக இந்தியாவின் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும், பொதுமக்கள் அரசை சார்ந்திருக்காமல் சுயசார்பு அடைய வேண்டும் என்று காந்தியடிகள் வலியுறுத்தினார். அவர் எண்ணங்களை நிறைவேற்றும் வகையான அரசின் நடவடிககைகளை காண்போம்.

மத்திய அரசு நடவடிக்கைகள்

1. உணவு  பாதுகாப்பு திட்டம்  (கொரோனா காலகட்டத்தில்)

1. தொடக்கம் மார்ச் 2020, மத்திய அரசு

நோக்கம் மற்றும் உணவு திட்டம்

  1. ஒவ்வொரு ஏழை நபருக்கும் கூடுதலாக 5 கிலோ கோதுமை மற்றும் அரிசி
  2. மொத்தமாக 10 கிலோ உணவு தானியங்களை பெற்றனர்
  3. ஒரு கிலோ பருப்பு வகைகள்

திட்டத்தின் காலம்

  1. முதலில் மூன்று மாதங்களுக்கு தொடங்கப்பட்டது
  2. பின்னர் 5 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது
  3. பிறகு செப்டம்பர் 2022 வரை நீட்டிக்க அரசு ஒப்புதல்

2.  ஸ்வநிதி திட்டம் (PM SVANidhi)

  1. தொடக்கம் 1 ஜூன் 2020, மத்திய அரசு

பயனாளர்கள்

  1. நகர்ப்புற மற்றும் புறநகர் பகுதி தெரு வியாபாரிகள்
  2. கிராமப்புற தெரு வியாபாரிகள்

திட்ட காலம்

ஜூன் 2020 முதல் மார்ச் 2022 வரை

நோக்கம்

  1. கோவிட் பெரும் தொற்று ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தெரு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கடன் உதவி மூலம் மேம்படுத்துவது.
  2. மூலதன கடன் வழங்குவது.
  3. கடன் தொகையை முறையாக செலுத்தினால் மேலும் கடன் தொகையை அதிகரித்து கடன் வழங்கப்படும்.
  4. டிஜிட்டல் முறையை ஊக்குப்பதன்.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்

  1. கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட தெரு வியாபாரிகளுக்கு மூலதன கடனை வழங்குதல்.
  2. மார்ச் 22 வரை நடைமுறையில் இருந்தது
  3. தொடக்க மூலதனம் ரூபாய் 10000/-
  4. கடனை முன்கூட்டியே அல்லது குறித்த காலத்தில் கட்டினால்    7% வட்டி மானியம்.
  5. டிஜிட்டல் மூலம் பணம் செலுத்தினால் கேஷ்பேக் ரூபாய் 50 முதல் 100.
  6. கடனை பெற பிணைய பாதுகாப்புத் தேவையில்லை  

மின்னணு தேசிய வேளாண் சந்தை (E-NAM)

  1. தொடக்கம் ஏப்ரல் 2016 மத்திய அரசு

நோக்கம்

  1. விவசாயிகள் பயனடைய செய்வது.
  2. விளை பொருட்களை விற்பனைக்கான புதிய வழிமுறை.
  3. தேசிய மின்னணு போட்டல் உருவாக்கி விவசாய பொருட்களுக்கான ஒருங்கிணைந்த தேசிய சந்தையை அமைப்பது.
  4. இதில் விவசாய உற்பத்தி சந்தை குழுக்களும் இணையும் (APMC).
  5. விலை மற்றும் வேளாண் பொருட்களுக்கு “ஒரு தேசம் ஒரே சந்தை” உருவாக்குவது.

செயல்முறை

  1. மாநில மொத்த விற்பனை சந்தைகள் உடன் இணைக்கப்படும்.
  2. இதற்கான மென்பொருள் இலவசமாக வழங்கப்படும்.

சமீபத்திய வளர்ச்சி

  1. முதல் கட்டம்-I – 585 மண்டிகளும்.
  2. இரண்டாம் கட்டம்-II 415 மண்டிகளும்.
  3. மொத்தம் 1000 மண்டிகளுடன் செயல்படுகிறது.

தனிநபர் சமூக பாதுகாப்பு திட்டங்கள்

1. தனிநபரின் வயது மற்றும் எதிர்பாராத நெருக்கடிகளை சமாளிக்க நிதி பாதுகாப்பு வாங்குவது.

  1. PM ஜீவன் ஜோதி பீமா யோஜனா
  2. PM சுரக்ஷா பீமா யோஜனா
  3. அடல் ஓய்வூதிய திட்டம்

2. கடந்த மூன்று ஆண்டுகளில் திட்டத்தின் கீழ் 20 கோடி பயனாளர்கள் சேர்ந்துள்ளனர்.

சுய வேலைவாய்ப்புமுத்துரா திட்டம்(MUDRA)

1. தொடக்கம் – ஏப்ரல் 2015, மத்திய அரசு

2. அமைச்சகம் – நிதி அமைச்சகத்தின் கீழ்

3. நோக்கம்

  1. சிறு, குறு வணிகர்களுக்கு நிதி அளிப்பது ஆகும்.
  2. வேலையின்மை பொருளாதார வளர்ச்சியை குறைத்தல்.
  3. நிதி நிறுவனங்களை (MFI) கண்காணித்தல் மற்றும்    ஒழுங்குபடுத்துதல்
  4. முறைசாரா பொருளாதாரத்தை முறையான துறையில்  ஒருங்கிணைத்தல்
  5. நிதி உள்ளடக்கத்தை ஊக்குவித்தல்.

4. கடன் உதவி

  1. வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFC)    மற்றும் மைக்ரோ நிதி நிறுவனங்கள்(MFI) போன்ற கடைசி மைல் நிதி நிறுவனங்கள் மூலம் பெரு நிறுவனம் அல்லாத சிறு வணிகத் துறைக்கு நிதி வழங்குதல்.

  2.  மூன்று வகையான கடன்கள்

  1. சிசு(Shishu) -ரூ 50,000 வரை கடன்
  2. கிஷோர்(Kishore) –  ரூ 50000 முதல் ரூ 5 லட்சம் வரை
  3. தருண் (Tarun) –  ரூ 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை

5. இதன் கீழ் உள்ள துறைகள்

  1. தரை போக்குவரத்து
  2. உணவு பொருட்கள் துறை
  3. துணி மற்றும் ஜவுளித் துறை
  4. சேவை துறைகள்

உஜ்வாலா திட்டம்

நோக்கம்

சமையலறை புகையிலிருந்து பெண்களுக்கு சுதந்திரம் அளிப்பது

தொடக்கம்

01 மே 2016, தூய்மையான எரிசக்தி, சிறந்த வாழ்க்கை என்ற வாக்குறுதியுடன் தொடங்கப்பட்டது.

  1. உஜ்வாலா 1.0

நாடு முழுவதும் 5 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள்

2. உஜ்வாலா 2.0

 1. தொடக்கம் 10 ஆகஸ்ட் 2021

2. நோக்கம்   எந்த உத்தரவாதமும் இல்லாமல் ஏழைகளுக்கு ஒரு கோடி சமையல் இணைப்பு வழங்குவது

USTTAD

தொடக்கம் 14 மே 2015

நோக்கம்

  1. சிறுபான்மையினரின் கைவினைத் திறன் பாரம்பரியத்தை பாதுகாக்கவும்.
  2. கைவினைஞர்கள் மற்றும் திறனை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது.
  3. திட்டம் பாரம்பரிய பணிகளில் உள்ள இளைஞர்கள் நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் திறமையை மேம்படுத்துவது.
  4. நிதி உதவி

1. மத்திய அரசு. 2. நவீன சந்தையுடன் இணையும் வகையில் தயாரிப்புகளை விற்பனை செய்ய உதவி செய்கிறது.

6efc525c2f0023f23d8ae709fa0f59a54ee462ae6a54678255fd33c37cc453f3?s=90&d=mm&r=g

Hari Prabu P

Hari Prabu P is a competitive exam content creator and the founder of TNPSC Thervu Thunaivan. With 5+ years of experience and a track record of clearing the TNPSC Group 2 Mains (twice) and multiple Banking Prelims (SBI, IBPS, RRB), he bridges the gap between aspirants and their career goals. Hari provides expert-curated study resources and real-time job alerts for TNPSC, SSC, Railways, and ISRO to help candidates secure their future in the public and private sectors.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
CRPF Constable Recruitment 2026 : Apply Now NEET PG 2025 Exam Dates NLC INDIA RECRUITMENT 2024 10 POWERFUL BOOKS : EVERY STUDENT SHOULD READ Top 10 Daily Vocabulary Words – Bank Exams