NITI Aayog | நிதி ஆயோக்

NITI Aayog | நிதி ஆயோக் கின் தொடக்கம், அமைப்பு, பணிகள் பற்றிய விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன.

1. NITI Aayog – National Institution for Transforming India என்பதன் சுருக்கமே நிதி ஆயோக் ஆகும்.

இந்தியாவை உருமாற்றம் செய்வதற்கான தேசிய நிறுவனம் என புரிந்துக்  கொள்ளலாம்.

நிதி ஆயோக் தொடங்கப்பட்டது

1. 13 ஆகஸ்டு 2014-ல் திட்டக்குழுவிற்கு பதிலாக நிதி ஆயோக் நிறுவனத்தை  உருவாக்கும் முடிவை இந்திய அரசு எடுத்தது.

2. 01 ஜனவரி 2015 அமைச்சரவைக் குழுவின் தீர்மானத்தின் மூலமாக நிதி ஆயோக் அமைக்கப்பட்டது.

நிதி ஆயோக் அமைப்பு

நிதி ஆயோக் தலைவர் : இந்தியப் பிரதமர்

இதன் உறுப்பினர்கள் : மத்திய அமைச்சர்கள்

நிர்வாக தலைவர் : துணை தலைவரே நிர்வாக தலைவர் ஆவர். (அரவிந்த் பனகரியா, முதல் துணைத்தலைவர்)

niti
Join Group Buttons
WhatsApp Group
Join Now
Telegram Group
Join Now

நிதி ஆயோக் அம்சங்கள்

1. NITI ஆயோக், தேவையான அறிவு மற்றும் திறன்களைக் கொண்ட ஒரு அதிநவீன வள மையமாகத் தன்னை வளர்த்துக் கொண்டு,

2. விரைவாக செயல்படவும், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும்,

3. அரசாங்கத்திற்கான மூலோபாயக் கொள்கை பார்வையை வழங்கவும் மற்றும் தற்செயல் சிக்கல்களைக் கையாளவும் உதவும்.

4. இது இணைக்கப்பட்ட அலுவலகம், வளர்ச்சி கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அமைப்பு (DMEO), ஒரு முதன்மை முயற்சி, அடல் புத்தாக்க இயக்கம் (AIM) மற்றும் ஒரு தன்னாட்சி அமைப்பு, தேசிய தொழிலாளர் பொருளாதார ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (NILERD) ஆகியவற்றால் ஆதரிக்கப்படுகிறது.

 NITI ஆயோக்கின் முழு அளவிலான செயல்பாடுகளையும் நான்கு முக்கியத் பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

  1. கொள்கை மற்றும் நிரல் கட்டமைப்பு
  2. கூட்டுறவு கூட்டாட்சி
  3. கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு
  4. திங்க் டேங்க், மற்றும் அறிவு மற்றும் புதுமை மையம்

நிதி ஆயோக்கின் பணிகள்

நிதி ஆயோக்கின் பணிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

  1. கூட்டுறவு மற்றும் போட்டி அடிப்படையிலான  கூட்டாட்சி.
    • மாநிலங்கள் நாட்டின் கொள்கை வடிவமைப்பதில் துடிப்புடன் பங்கேற்கத் தேவையானவற்றை செய்வது.
  2. நாட்டின் நிகழ்வுகளின் மாநிலங்களைப் பங்கெடுக்க வைத்தல்.
    • நாட்டின் முன்னேற்றத்திற்கான முன்னுரிமைகள் மற்றும் உத்திகளில் மாநிலங்களையும் இணைத்துக் கொள்ளுதல்.
  3. பரவிலக்கப்பட்டத் திட்டமிடல்.
    • திட்டமிடல் நடைமுறையை கீழிருந்து மேல் என்ற முறையில் மாற்றம் கொண்டுவருதல்.
  4. தொலைநோக்கு மற்றும் காட்சித் திட்டமிடல்.
    • நாட்டின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு இடைக்கால மற்றும் நீண்ட கால தொலைநோக்கு கட்டமைப்பை வடிவமைத்தல்.
  5. நிபுணர்களின் கூட்டமைப்பை உருவாக்குதல்.
    • அரசின் கொள்கைகள் வடிவமைப்பதிலும், திட்டங்களை செயல்படுத்துவதிலும் அரசுக்கு வெளியில் உள்ள நிபுணர்கள் ஒன்றிணைத்து பங்கு பெற வைத்தல்.
  6. உகந்ததாக்குதல்.
    • அரசின் பல படிநிலைகளில் பணியாற்றுபவர்களை குறிப்பாக பலதுறைகள் ஒன்றிணைத்து செயல்படுமிடங்களில் ஏற்படும் பிரச்சனைகளை களைய தொடர்பு கொள்ளுதல், ஒருங்கிணைத்தல், கைகோர்த்தல் மற்றும் கூட்டிணைத்தல் மூலம் உகந்த பணியை நிதி ஆயோக் செய்கிறது.
  7. சச்சரவுத் தீர்த்தல்.
    • அரசுத் திட்டங்களை வேகமாக செயல்படுத்த மாநில மைய அரசுகளுக்கு இடையில், மாநிலங்களுக்கு இடையில், அரசுத் துறைகளுக்கிடையில் மற்றும் பிற துறைகளுக்கிடையில் நிலவும் சச்சரவுகளுக்குத் தீர்வுகான ஒரு தளத்தை அமைத்துக் கொடுக்கிறது.
  8. வெளி உலகத் தொடர்பை ஒருங்கிணைத்தல்.
    • வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனைகளையும் பன்னாட்டு நிறுவனங்களில் இருந்து கிடைக்கும் நிதி வளங்களையும் நாட்டின் முன்னேற்றத்திற்குப் பயன்படும் வகையில் பெற்றுத் தரும் பொறுப்பு அலுவலகமாக நிதி ஆயோக் செயல்படும்.
  9. உள்நாட்டு ஆலோசனை வழங்குதல்.
    • கொள்கைகள் மற்றும் திட்டங்கள் வகுக்க மாநில மற்றும் மைய அரசுகளுக்கு ஆலோசனைகளை வழங்குகிறது.
  10. திறன் உருவாக்குதல்.
    • அரசுத் துறைகளில் திறனை வளர்க்கவும் தொழில் நுட்பத்தை மேம்படுத்தவும், உலக அளவில் தற்போது நடைமுறையில் உள்ள தர அளவு கோள்களை கொண்டும், மேலாண்மை நுட்பங்கள் வழியாகவும் திறன் உருவாக்கும் பணியை நிதி ஆயோக் செய்கிறது.
  11. கண்காணித்தல் மற்றும் மதிப்பிடுதல்.
    • அரசு செயல்படுத்தும் திட்டங்களை நிதி ஆயோக் கண்காணித்து அதன் விளைவுகளை மதிப்பீடு செய்கிறது.
    • இதன் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அலுவலகம் அரசின் பல்வேறு துறைகளில் அலுவலங்களில் புள்ளி விவரத்தை சேகரித்து அவற்றின் செயல்பாட்டை கண்காணிக்கிறது.
    • மாநிலங்களையும் வரிசைப்படுத்தி போட்டி அடிப்படையிலான கூட்டாட்சி உணர்வை வளர்க்கிறது.

Thanks to : TN School Book

About Hari Prabu P

Hari Prabu P is a competitive exam content creator and the founder of TNPSC Thervu Thunaivan. With 5+ years of experience and a track record of clearing the TNPSC Group 2 Mains (twice) and multiple Banking Prelims (SBI, IBPS, RRB), he bridges the gap between aspirants and their career goals. Hari provides expert-curated study resources and real-time job alerts for TNPSC, SSC, Railways, and ISRO to help candidates secure their future in the public and private sectors.

View all posts by Hari Prabu P →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *